Wednesday, January 19, 2011


தண்ணீரில் ஓடும் கார் விரைவில் வருது.................


பெங்களூர்: பெட்ரோல், டீசல் விலை திடீர் திடீரென்று உயர்கிறது. எல்லா வீட்டு பட்ஜெட்டிலும் மாதாமாதம் துண்டு விழுகிறது. இந்த தொந்தரவுக்கு விடிவு கிடைக்கப்போகிறது. தண்ணீரில் ஓடும் கார் விரைவில் தயாராகும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

நானோ தொழில்நுட்பம் குறித்த சர்வதேச மாநாடு பெங்களூரில் நேற்று தொடங்கியது. இன்றும் நடக்கிறது. உலகின் பல நாடுகளில் இருந்தும் ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், நிபுணர்கள் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமரின் அறிவியல் ஆலோசனை கவுன்சில் தலைவர் சி.என்.ஆர்.ராவ் வந்துள்ளார். அவர் தெரிவித்த தகவல்கள்: அமெரிக்காவின் மசாசூசட்ஸ் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர் டேனியல் நோசரா.

அவரும் அவரது ஆய்வுக்கூடத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் மேத்யூ கனன் என்பவரும் சேர்ந்து சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிப்பது தொடர்பாக தீவிரமாக ஆய்வு நடத்தினர். சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தை சேமித்து வைத்து, இரவு மற்றும் மழை நேரங்களில்கூட பயன்படுத்த முடியும் என்று 2008 ல் கண்டுபிடித்து அறிவித்தனர். சூரிய ஒளியை பயன்படுத்தி தண்ணீரை ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனாக தனித்தனியே பிரிப்பதற்கான முறையையும் உருவாக்கினர்.

இவ்வாறு தனித்தனியே கிடைக்கும் ஹைட்ரஜன், ஆக்சிஜனை ஒன்றுசேர்த்தால் அதிக மின்சாரம் கிடைக்கும். இதை வைத்து வீடு முழுவதும் விளக்குகளை எரிய வைக்க முடியும் என்றும் கூறினர். கார்பன் எரிக்கப்படாத மின்சாரம் என்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது. 

நோசரா என் நண்பர். இந்த ஆய்வு பற்றி டாடா நிறுவனத்திடம் கூறினேன். கார் ஓட்டுவதற்கு இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாமே என்று யோசனை கூறப்பட்டது. இந்த ஆய்வை தீவிரப்படுத்தி, தண்ணீரில் ஓடும் காரை உருவாக்குவதற்கான பணிகள் மசாசூசட்ஸ் ஆய்வுக்கூடத்தில் தீவிரமாக நடந்து வருகின்றன. தண்ணீரில் ஓடும் கார் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கலாம். இவ்வாறு ராவ் கூறினார்.

Monday, January 17, 2011

இலங்கையில் வேற்றுக்

கிரகவாசிகளின் நடமாட்டம் ?
இலங்கையில் வேற்றுக் கிரக வாசிகளின் நடமாட்டம் காணப்பட்தாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்றைய தினம் நாட்டின் பல பாகங்களிலும் அதிசமான நிகழ்வுகள் நடைபெற்றதாக பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

வேற்றுக் கிரகவாசிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக பல பாகங்களில் தகவல்கள் வெளியானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பறக்கும் தட்டுகளை சிலர் நேரடியாக பார்த்ததாக பத்திரிகைக்கு தகவல் அளித்துள்ளனர்.

பறக்கும் தட்டுகள் நாட்டின் பல பாகங்களிலும் தரையிறங்கியிருக்கலாம் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.

பச்சை நிற உடலுடைய குள்ள மனிதர்கள் பறக்கும் தட்டிலிருந்து இறங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது
.
கற்கள் தானாக நகரும் மர்மமான ‘மரண வெளி’

அமெரிக்காவின் ‘ரேஸ் டிரெக் பிளாஸா’ என்னும் பிரதேசம் உலகப் பிரசித்தமானது. இதற்கு ‘மரண வெளி’ என்று பெயர். ஏன் தெரியுமா? இங்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்களோ உயிரினங்களோ, மரம் மட்டைகளோ கிடையாது.
பாலைவனம் போன்ற பரந்து விரிந்து கிடக்கும் இந்தப் பிரதேசத்தில் வரட்சி காலத்தில் நிலம் வெடிப்பு விழுந்து ஓட்டைகளில் ‘ஐஸ்’ படர்ந்திருக்கும். இந்த மர்ம பூமியில் கற்கள் தானாக நகர்ந்து செல்கின்றன. நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் இந்த மர்மத்திற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இவை நகர்ந்து சென்ற அடையாளங்கள் தெளிவாகக் காணப்படுகின்றனவாம்.
இங்குள்ள கற்கள் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் முழு பிரதேசத்தையும் சுற்றி வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. சில சமயங்களில் இரு கற்கள் ஒரே நேரத்தில் பயணத்தை ஆரம்பிக்கும். ரயில் பாதை போன்று அவை சமாந்தரமாக அந்த பூமியைச் சுற்றி வருகின்றன. சில சமயங்களில் அவற்றில் ஒரு கல் வலது பக்கமோ இடது பக்கமோ திரும்பி தனது பயணத்தை தனியாக தொடர்வதுண்டு. இவை பின்னோக்கி நகர்ந்த சந்தர்ப்பங்களும் இருக்கவே செய்கிறது.
இந்த பரந்த நிலப்பரப்பிற்கு அருகில் இருக்கும் மலையில் இருந்து கற் துண்டுகள் உடைந்து விழுகின்றன. அவையே இந்தப் பூமியெங்கும் நடமாடுகின்றன. இவை நடந்து திரியும் தூரம் 10 ஆயிரம் அடிகளை விட அதிகமாம். சில கற்கள் ஒரு அடி மட்டுமே நகர்கின்றன.இந்த மர்ம பிரதேசம் குறித்து முதன் முதலில் 1948 இலே தகவல் வெளியானது. 1972-80 காலப் பகுதியில் பாரியளவிலான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
கற்கள் மர்மமாக நகர்வதற்கு இந்த பாலைவனமா அல்லது அங்குள்ள களிமண் தட்டா காரணம்? இவை வேகமான காற்றினால்தான் நகர்கின்றன என்று சிலர் கூறலாம். ஆனால் இப்பகுதியில் கடும் காற்று வீசுவதில்லையாம். எனவே அந்த வாதமும் எடுபடாது.
நிலத்துக்குள் இருக்கும் ஒருவித சக்தியே கற்கள் நகர்வதற்குக் காரணம் என மெசசுசெட்ஸ் பகுதி ஹெம்சயர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வெற்றுக் கண்களுக்கு புலப்படும் வகையில் இவை நகர்வது கிடையாது. சிறிய கல்லொன்று வருடம் முழுவதும் இரண்டரை அங்குலம் மட்டுமே நகர்ந்த போதும் 36 கிலோ எடையுள்ள கல்லொன்று 659 அடிகள் நகர்ந்திருக்கிறது. கல்லின் அளவுக்கும் அவை நகர்வதற்கும் எதுவித தொடர்பும் கிடையாது என்பதை இது காட்டுகிறது.
இந்தப் பாழடைந்த மர்மமான பிரதேசத்தில் மனித நடமாட்டம் இல்லாவிட்டாலும் கற்களின் நடமாட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அவை பற்றிய ஆய்வுகளும்தான்.
தண்ணீரில் மிதக்கும் ‘வைரம்’
வைரங்கள் அதிக பளபளப்பு கொண்டவை; அதேபோன்று விலையும் அதிகம். பட்டை தீட்டப்படாத வைரம் மிகவும் கடினமானது. இயற்கையான வைரம் உருவாவதற்கு அதிக வெப்பமும், அழுத்தமும் தேவைப்படுகிறது. பூமியில் மிகச்சில வைரச்சுரங்கங்களே உள்ளன. உலகில் உள்ள வைரங்களில் 90 சதவீதம் தென் ஆப்பிரிக்காவில் இருந்து கிடைக்கிறது.
மற்ற எல்லா ரத்தினங்களை விடவும் வைரத்தின் படிகக் கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. கார்பன் அணுக்களின் கட்டமைப்பே அதனை மிகக் கடினமாக மாற்றியுள்ளது. இது எண்முக வடிவம் அல்லது ஆறு சதுர பக்கங்களைக் கொண்டிருக்கும். திரவத்தில் கரையாது, கொழுப்பில் ஒட்டும், வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்தாது போன்ற பண்புகள் வைரத்துக்கு உண்டு.
தூய வைரம் தண்ணீரில் மிதக்கும். மேலும் ஒளி விலகல் மற்றும் ஒளிபுகும் திறன் ஆகிய இரண்டும் வைரத்துக்கு உண்டு. பென்சில், நிலக்கரி மற்றும் வைரம் ஆகிய மூன்றும் கார்பன் அணுக்களால் ஆனவை. வைரங்களின் இயற்பியல் மற்றும் வேதியல் பண்புகளால் அது மற்ற ரத்தினங்களில் இருந்து வேறுபடுகிறது.
பொதுவாக வைரங்கள் மஞ்சள் கலந்த வெண்மை நிறத்திலும், சில சமயங்களில் ஊதா, வெளிர் சிவப்பு, சிவப்பு, பச்சை மற்றும் அடர் சாம்பல் நிறங்களில் கூட கிடைக்கின்றன. ஊதா நிற வைரம் அதிக விலை கொண்டது. ஏனெனில் இந்தநிற வைரங்கள் கிடைப்பது மிக அரிதாகவே உள்ளது
2012ல் உலகம் அழிந்து விடுமா?

விறுவிறுப்பான ஆராய்ச்சி பார்வை!

உலகம் 2012ல் அழிந்து 


விடுவது சர்வ நிச்சயம் என்று 


பல மேற்கத்திய விஞ்ஞானிகளும், 


ஜோதிடர்களும் அடித்துக் கூறி 


வருகிறார்கள். இந்நிலையில், இவை 


அனைத்தும் பொய் என்றும், இன்னும் 


450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் 


அழியாது என்றும் விறுவிறுப்புடன் 


இந்திய விஞ்ஞானி விவாதிக்கிறார்.


உலகம் 2012ல் அழிந்து விடும் 


என்பதற்கு சான்றாக சில முக்கிய 


கூறுகள் உள்ளன.


இன்று நாம் பின்பற்றி வரும் திகதி 


முறைகளை பல ஆயிரம் 


ஆண்டுகளுக்கு முன்பே துல்லியமாக 


கணித்தவர்கள் மாயன் நாகரித்தினர். 


சூரியன் காலாவதியாகும் 


திகியையும் இவர்கள் 


கணித்துள்ளனர். இவர்கள் 


கூற்றுப்படி, அந்த திகதி 2012 தான். 


எனவே, 2012ல் உலகம் 


அழிந்துவிடும் என்பது இவர்கள் 


கருத்து.


சூரியனுக்குள் ஏற்படவிருக்கும், 


பனிப்புயல்கள் காரணமாக ஏற்படும் 


கதிர்வீச்சு பூமியை பொசுக்கிவிடும் 


என்கிறார்கள் சூரிய 


ஆராய்ச்சியாளர்கள்.


உலகம் உருவான விதம், உலகை 


இயக்கும் அடிப்படை கட்டமைப்பைத் 


தெரிந்து கொள்ள விரும்பிய 


ஐரோப்பிய விஞ்ஞானிகள், உலகின் 


பெரிய மூலக்கூறு இயந்திரத்தை 


கண்டறிந்துள்ளனர். இவர்கள் 27 


கிலோ மீட்டர் ஆழத்தில், 


அணுக்களை வைத்து, அவற்றை 


ஒன்றிணைத்து மீண்டும் வெடிக்கச் 


செய்ய திட்டமிட்டுள்ளனர். இவற்றை 


2012ல் நிகழ்த்த திட்டமிட்டுள்ளனர். 


அவ்வாறு நடந்தால், பூமியே 


நொறுங்கி விடும்.


திரு விவிலிய நூலில், உலகம் 


2012ல் அழிந்துவிடும் என்று 


குறிப்பிடப்பட்டுள்ளதாம். 


கடவுளுக்கும், சாத்தானுக்கும் 


கடைசி யுத்தம் நடக்கும் போது, இந்த 


அழிவு ஏற்படும் என்று பைபிள் 


கூறுகிறது. இதையே, சீனத்து 


நூல்களும், சில இந்து புராணங்களும் 


கூறுகின்றன.


இந்த உலகமே பெரிய எரிமலை 


ஒன்றின் வாயில் இருப்பதாகவும், 


அது வெடித்தால் இந்த உலகமே 


சிதறிவிடும் என்று அமெரிக்க 


மண்ணியல் ஆய்வாளர்கள் 


தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வு 


650000 ஆண்டுகளுக்கு ஒரு முறை 


நடக்குமாம். அந்த ஆண்டு 2012 


என்கிறார்கள் அவர்கள்.


இவையனைத்தும் 2012ல் உலகம் 


அழிந்துவிடும் என்பதற்கு ஆதாரமாக 


சொல்லப்படும் காரணங்கள்.


மேற்கூறிய அனைத்தும் பொய் என்று 


இந்திய விஞ்ஞானி அய்யம் 


பெருமாள் அடித்துக் கூறுகிறார்.


விஞ்ஞானிகள் நிகழ்த்திய அதிநுட்ப 


ஆராய்ச்சியின் படி, இன்னும் 450 


ஆண்டுகளுக்கு உலகம் 


அழிவதற்கான வாய்ப்பே இல்லை 


என்கிறார் அய்யம் பெருமாள்.


இன்னும் ஒரு சிலர், 2020ம் ஆண்டு 


பூமியை குறுங்கோள் ஒன்று தாக்கும் 


என்கிறார்கள். அப்படி ஒரு நிலை 


வந்தால், அக்னி ஏவுகணை மூலமாக 


அதை அழிக்கும் திறன் உலக ஆய்வுக் 


கூடத்தில் உள்ளது. எனவெ, 


எக்காரணத்தைக் கொண்டும் பூமி 


அழியாது என்கிறார் இவர்.


சூரிய சக்தி மூலமாக மின்சாரம் 


பெறும் முயற்சி வெற்றி 


பெற்றுவிட்டது. அதேபோல், கடல் 


நீரை குடிநீர் ஆக்கும் திட்டமும் 


வெற்றி பெற்றுள்ளது. எனவே, உலக 


மக்களின் தேவைக்கு மின்சாரமும், 


குடிநீரும் உள்ளது. எதிர்காலத்தில் 


நாம் அதற்கு பயப்பட 


தேவையில்லை என்கிறார் அவர்.


பூமி வெப்பமயமாதலைத் தடுக்க 


அனைவரும் மரக்கன்றுகளை நட்டு 


வளர்த்து, மாசு கட்டுப்பாட்டை சரி 


செய்யலாம். அதன் மூலம் 


அனைவரும் ஆரோக்கியமாக 


வாழலாம் என்கிறார் விஞ்ஞானி 


அய்யம் பெருமாள்.

Sunday, January 16, 2011

Nokia Phone இல் தமிழ் தளங்களை

பார்ப்பது எப்படி?

உங்களுடைய கை தொலைபேசியிலும் இலும் தமிழ் website ஐ பார்க்க முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான், உங்களுடைய phone இல் www.opera.com இங்கு செல்லவும்.opera for phones

download opera mini 5.1 (271 KB)

download செய்த பிறகு

Address Bar இல் www. ஐ அழித்து விட்டு opera:config என டைப் செய்யுங்கள்

ஆக கடைசியில் use bitmap fonts for complex scripts என்பது No என்று இருக்கும் அதை yes என மாற்றி விட்டு save செய்து கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் Opera வை exit செய்து விட்டு மீண்டும் open செய்யுங்கள். தமிழ் தளம் இனி உங்களுடைய phone இல் சரியாக வேலை செய்கின்றதா என தெரிந்து கொள்ள மேலே உள்ள Google search இல் nimzath என தேடி பார்க்கவும்.

Saturday, January 15, 2011

தைப்பொங்கலுக்கும் தமிழ்ப்புத்தாண்டிற்கும் வாழ்த்து தெரிவித்த கனடிய அரசும் ஆளும் கட்சி முக்கியஸ்தர்கள்

கனடிய அரசு சார்பாகவும் பிரதமர் சார்பாகவும் கனடிய குடிவரவு குடியகல்வு மற்றும் பல்கலாச்சார அமைச்சர் ஜெசக் கெனி அவர்களும் ஆளும் கட்சியின் ஒன்றாரியோ கட்சித் தலைவர் ரிம் குடாக் அவர்களும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலுக்கு தமது மனம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்து செய்திக்குறிப்புளை வெளியிட்டுள்ளார்கள்.
தைப்பொங்கல் விழாவை அனைத்துத் தமிழ்க் குடும்பங்களும், தொண்டர்களும், சமூகப்பெரியார்களும் ஒன்றுகூடிக் கொண்டாடுவதை தாம் மனமார வாழ்த்துவதில் மகிழ்வடைவதாகவும், தமிழர்களின் கலாச்சாரத்தையும், கனடாவின் பல்கலாச்சாரத்திற்கு தமிழ் மக்களின் பங்கழிப்பையும் கனடாவிலுள்ள ஏனைய சமூகத்தினரும் அறிந்துகொள்வதற்கு இப்பொங்கல்விழாவானது ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய பல்கலாச்சார தன்மையின் வெற்றியில் பங்கெடுக்கும் தமிழர்களுக்கு தங்களது நன்றியையும் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் தைப்பொங்கலின் நோக்கமும் அதில் தமிழர்களின் பங்களிப்பு பற்றியும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. சிங்கள அரசால் தொடர் இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட்டுவரும் தமிழினம் சர்வதேச ரீதியாக பயங்கரவாதக் கண்ணோட்டத்தோடு பார்க்கப்பட்டுவரும் துர்ப்பாக்கிய நிலையில் தமிழர்கள் நன்றிக்கடன் செலுத்தும் நற்பண்பு உடையவர்கள் என்றும் அவர்கள் தமக்கென தனியான கலை பண்பாட்டு பாரம்பரிய அம்சங்களைக் கொண்டுள்ளவர்கள் என்பதையும் ஒவ்வொரு நாடுகளும் அதன் அதிகார மையங்களும் ஏற்றுக்கொள்வதும் வாழ்த்திக்கொள்வதும் தமிழரின் விடுதலைப் பயணத்தில் முக்கியமான அம்சமாக விளங்கும் என்பதை கருத்தில் கொண்டு ஏனைய நாட்டில் வாழும் புலம்பெயர்தமிழர்களும் தங்கள் தங்கள் அரசுகளையும் அமைச்சர்களையும் தமிழர் திருநாளுக்காண வாழ்த்துச் செய்தியை பெற்று ஆவணப்படுத்திக்கொள்வதும் ஊடகங்கள் ஊடாக பகிர்ந்து கொள்வதும் நன்மை பயக்கும்.

Friday, January 14, 2011

நோக்கியா E5


நோக்கியா அடுத்தவரவு நோக்கியா E5.இந்த போன்களின் பட்டன்கள் சாதாரன போன்களைப் போல இல்லாமல் கம்ப்யூட்டர் பட்டன்களின் வரிசையைப் போல இருக்கும். இதில் மெயில் வசதியும் உள்ளது.




புதிய செல்போன் வாங்க நினைப்பவர்கள் முதலில் கேட்கும் கேள்வி, 3 ஜி வசதி இருக்கிறதா என்பதுதான். அத்துடன் ஜிபிஎஸ், வைஃபை, க்வெர்டி கீபோர்டு போன்ற தொழில்நுட்பங்களும் கிடைக்குமா என்று ஆசைப்படத் தொடங்கிவிட்டனர்.
ஆனால்  நோக்கியாவின் 2 புதிய வெளியீடுகள் இந்த நிலைமையை மாற்றியிருக்கின்றன. அதில் ஒன்று C5 மற்றொன்று E5.
3ஜியின் முக்கிய வசதியே இணையப் பயன்பாடுதான். சி5 மற்றும் இ5 ஆகிய இரண்டு மாடல்களும் 10.2 எம்பிபிஎஸ் வேகம் வரை இணையத் தொடர்பை அளிக்கின்றன. சேவை அளிப்பவர்கள் அந்த வேகத்தில் இணைப்பை வழங்க வேண்டும் அவ்வளவுதான். சி5ல் வைஃபை வசதி கிடையாது. இ5-ல் இந்த வசதி இருக்கிறது.
இதில் சி5 மிகவும் எளிமையான வழக்கமான தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. இ5 மிகவும் நவீனமான க்வெர்டி கீபோர்டு வசதியுடன் வந்திருக்கிறது. இதில் இ5-ல் விடியோ கால் கேமரா கிடையாது. ஆனால், வேறுபல வசதிகள் இ5-ல் அளிக்கப்பட்டிருக்கின்றன.
சி5-ல் 128 எம்பி ராம் மெமரியும் இ5-ல் 256 எம்பி ராம் மெமரியும் உள்ளன. இந்த வசதியால் இந்த இரு போன்களுமே மிக வேகமாகச் செயல்படுகின்றன. அதேபோல் சி5-ல் 50 எம்பி செகன்டரி ஸ்டோரேஜ் மெமரியும் இ5-ல் 250 எம்.பி செகன்டரி ஸ்டோரேஜ் மெமரியும் உள்ளன. கூடுதலாக 2 ஜிபி மெமரி கார்டு வழங்கப்படுகிறது. சி5யில் 3.2 மெகாபிக்சல் கேமராவும் இ5-ல் 5 மெகாபிக்சல் கேமராவும் உள்ளன.
சி5 ஸ்கீரின் 16 மில்லியன் வண்ணத்திறனும் இ5 ஸ்கிரீன் 256கே வண்ணத்திறனும் கொண்டிருக்கின்றன. இ5-ல் குறைந்த வண்ணத்திறன இருப்பதால் பெரிதாக வேறுபாடு ஒன்றும் தெரியவில்லை.
இரு போன்களிலுமே ஜிபிஎஸ் வசதி இருக்கிறது. ஏபிஜிபிஎஸ் சேவையும் கிடைக்கும். நீங்கள் இருக்கும் இடத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வகை செய்யும் கூகுள் லாட்டிட்யூட் சேவை இரு போன்களிலுமே மிக அருமையாகச் செயல்படுகிறது.
செல்லும் இடங்களிலெல்லாம் இணைத்தை மேய நினைப்போருக்கு இ5 போனும், விடியோ கால் வசதி கண்டிப்பாக வேண்டும் என நினைப்போருக்கு சி5 போனும் சிறந்தது.


உங்கள் ஈமெயில்களின் வருகையை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். இளைஞர்களையும் அலுவலகம் செல்லும் நபர்களையும் குறி வைத்து இந்த போன்கள் வந்துள்ளன. ஒரே நேரத்தில் பத்து ஈமெயில் அக்கௌன்ட்கள் வரை இந்த போனில் நாம் பார்க்கலாம். இதில் சாட்டிங் வசதியும் உள்ளது. போன் வாங்கும் பொழுதே சாட்டிங் சாப்ட்வேரும் சேர்ந்தே வருகிறது.
மேலும் இந்த போனின் சிறப்பம்சங்கள்
▪ 2.4 inch QVGA LCD display
▪ 320 x 240 pixel resolution
▪ Full QWERTY keyboard
▪ 3G Connectivity
▪ Wi-Fi
▪ 5 megapixel camera with LED flash
▪ 250 MB internal memory
▪ 32 GB expandable memory
▪ 2 GB MicroSD card included
▪ 3.5mm headphone jack
▪ Bluetooth
▪ A-GPS
▪ OVI Maps
▪ 1 click access to SMS/MMS and email
▪ OVI Chat
▪ OVI Share
▪ 18 hours 30 mins talktime
▪ 29 days stand-by time
▪ 1200 mAh battery





 The smart way  to stay in contact



Connect seamlessly to the people in your professional and personal lives through instant messaging, email and your favourite online social networks.







                      

Applications

  • View and edit Microsoft Word, Excel and PowerPoint documents using the
    Quickoffice application. 
  • Sync your documents, photos, calendar and contacts – your Nokia E5 works
    seamlessly with your compatible computer. 
  • Listen to your favourite tracks, create playlists and import music from
    your personal collection with Nokia Ovi Player.