Monday, January 17, 2011

2012ல் உலகம் அழிந்து விடுமா?

விறுவிறுப்பான ஆராய்ச்சி பார்வை!

உலகம் 2012ல் அழிந்து 


விடுவது சர்வ நிச்சயம் என்று 


பல மேற்கத்திய விஞ்ஞானிகளும், 


ஜோதிடர்களும் அடித்துக் கூறி 


வருகிறார்கள். இந்நிலையில், இவை 


அனைத்தும் பொய் என்றும், இன்னும் 


450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் 


அழியாது என்றும் விறுவிறுப்புடன் 


இந்திய விஞ்ஞானி விவாதிக்கிறார்.


உலகம் 2012ல் அழிந்து விடும் 


என்பதற்கு சான்றாக சில முக்கிய 


கூறுகள் உள்ளன.


இன்று நாம் பின்பற்றி வரும் திகதி 


முறைகளை பல ஆயிரம் 


ஆண்டுகளுக்கு முன்பே துல்லியமாக 


கணித்தவர்கள் மாயன் நாகரித்தினர். 


சூரியன் காலாவதியாகும் 


திகியையும் இவர்கள் 


கணித்துள்ளனர். இவர்கள் 


கூற்றுப்படி, அந்த திகதி 2012 தான். 


எனவே, 2012ல் உலகம் 


அழிந்துவிடும் என்பது இவர்கள் 


கருத்து.


சூரியனுக்குள் ஏற்படவிருக்கும், 


பனிப்புயல்கள் காரணமாக ஏற்படும் 


கதிர்வீச்சு பூமியை பொசுக்கிவிடும் 


என்கிறார்கள் சூரிய 


ஆராய்ச்சியாளர்கள்.


உலகம் உருவான விதம், உலகை 


இயக்கும் அடிப்படை கட்டமைப்பைத் 


தெரிந்து கொள்ள விரும்பிய 


ஐரோப்பிய விஞ்ஞானிகள், உலகின் 


பெரிய மூலக்கூறு இயந்திரத்தை 


கண்டறிந்துள்ளனர். இவர்கள் 27 


கிலோ மீட்டர் ஆழத்தில், 


அணுக்களை வைத்து, அவற்றை 


ஒன்றிணைத்து மீண்டும் வெடிக்கச் 


செய்ய திட்டமிட்டுள்ளனர். இவற்றை 


2012ல் நிகழ்த்த திட்டமிட்டுள்ளனர். 


அவ்வாறு நடந்தால், பூமியே 


நொறுங்கி விடும்.


திரு விவிலிய நூலில், உலகம் 


2012ல் அழிந்துவிடும் என்று 


குறிப்பிடப்பட்டுள்ளதாம். 


கடவுளுக்கும், சாத்தானுக்கும் 


கடைசி யுத்தம் நடக்கும் போது, இந்த 


அழிவு ஏற்படும் என்று பைபிள் 


கூறுகிறது. இதையே, சீனத்து 


நூல்களும், சில இந்து புராணங்களும் 


கூறுகின்றன.


இந்த உலகமே பெரிய எரிமலை 


ஒன்றின் வாயில் இருப்பதாகவும், 


அது வெடித்தால் இந்த உலகமே 


சிதறிவிடும் என்று அமெரிக்க 


மண்ணியல் ஆய்வாளர்கள் 


தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வு 


650000 ஆண்டுகளுக்கு ஒரு முறை 


நடக்குமாம். அந்த ஆண்டு 2012 


என்கிறார்கள் அவர்கள்.


இவையனைத்தும் 2012ல் உலகம் 


அழிந்துவிடும் என்பதற்கு ஆதாரமாக 


சொல்லப்படும் காரணங்கள்.


மேற்கூறிய அனைத்தும் பொய் என்று 


இந்திய விஞ்ஞானி அய்யம் 


பெருமாள் அடித்துக் கூறுகிறார்.


விஞ்ஞானிகள் நிகழ்த்திய அதிநுட்ப 


ஆராய்ச்சியின் படி, இன்னும் 450 


ஆண்டுகளுக்கு உலகம் 


அழிவதற்கான வாய்ப்பே இல்லை 


என்கிறார் அய்யம் பெருமாள்.


இன்னும் ஒரு சிலர், 2020ம் ஆண்டு 


பூமியை குறுங்கோள் ஒன்று தாக்கும் 


என்கிறார்கள். அப்படி ஒரு நிலை 


வந்தால், அக்னி ஏவுகணை மூலமாக 


அதை அழிக்கும் திறன் உலக ஆய்வுக் 


கூடத்தில் உள்ளது. எனவெ, 


எக்காரணத்தைக் கொண்டும் பூமி 


அழியாது என்கிறார் இவர்.


சூரிய சக்தி மூலமாக மின்சாரம் 


பெறும் முயற்சி வெற்றி 


பெற்றுவிட்டது. அதேபோல், கடல் 


நீரை குடிநீர் ஆக்கும் திட்டமும் 


வெற்றி பெற்றுள்ளது. எனவே, உலக 


மக்களின் தேவைக்கு மின்சாரமும், 


குடிநீரும் உள்ளது. எதிர்காலத்தில் 


நாம் அதற்கு பயப்பட 


தேவையில்லை என்கிறார் அவர்.


பூமி வெப்பமயமாதலைத் தடுக்க 


அனைவரும் மரக்கன்றுகளை நட்டு 


வளர்த்து, மாசு கட்டுப்பாட்டை சரி 


செய்யலாம். அதன் மூலம் 


அனைவரும் ஆரோக்கியமாக 


வாழலாம் என்கிறார் விஞ்ஞானி 


அய்யம் பெருமாள்.

No comments: